×

பத்துகாணி பகுதியில் காட்டு பன்றி கடித்து கோழிகள் சாவு

அருமனை.ஏப்.4: பத்துகாணி பகுதியில் பிரேமா என்பவர் வீட்டில் அழகிய பூந்தோட்டம் அமைத்து கொடுப்பது மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். கோழிகள் வளர்க்கும் பகுதியில் நேற்று அதிகாலையில் காட்டு பன்றி கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. கோழிகள் அனைத்தையும் கடித்துக் கொன்றது. இதில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. இதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளளது. கடந்த ஒரு மாதத்தில் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளது. இதுவரை 50கும் மேற்பட்ட கோழிகளை கடித்து கென்றுள்ளது. இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடப்பதாக ஊர் மக்கள் பலரும் புகார் கூறுகின்றனர்.

The post பத்துகாணி பகுதியில் காட்டு பன்றி கடித்து கோழிகள் சாவு appeared first on Dinakaran.

Tags : Batukhani ,Bathugani ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...